மலையாள சினிமா உலகில் பிரபல நடிகையான அபர்ணா பாலமுரளி தமிழில் 8 தோட்டாக்கள், சர்வம் தாள மயம், சூரரைப்போற்று உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். சூர்யாவுடன் சேர்ந்து நடித்த சூரரை போற்று திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இதையடுத்து அண்மையில் இவர் நடிப்பில் வீட்ல விசேஷம் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்நிலையில்  கேரளாவில் ஒரு கல்லூரி நிகழ்வில் கலந்து கொண்டபோது அபர்ணா முரளியிடம் மாணவர் ஒருவர் அத்துமீறி நடந்து கொண்டார்.

அதுகுறித்து பேசியிருக்கும் அபர்ணா, “சட்ட மாணவருக்கு பெண்ணின் உரிமையின்றி தொடக் கூடாது என்பது தெரியாதா? என் கையை பிடித்து இழுத்து போட்டோ எடுக்க முயன்றார். அதோடு தோள்களில் கை போட்டார். இது சரியல்ல” என்று கூறியிருக்கிறார். கல்லூரி நிர்வாகம் அந்த மாணவரை இடைநீக்கம் செய்திருக்கிறது.