தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது . அவ்வகையில் குரூப் 3 உள்ளிட்ட 232 காலியிடங்களுக்கான தேர்வுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.அதாவது  அரசு புள்ளியியல் உதவி ஆய்வாளர் பதவியில் 211, பொது சுகாதாரத் துறையில் கணக்கிட்டாளர்கள் ஐந்து, புள்ளியியல் ஒருங்கிணைப்பாளர்கள் 1 என மொத்தம் 217 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இதற்கான தேர்வு  ஜனவரி 26ஆம் தேதி நடைபெறஉள்ளது.  இந்நிலையில் TNPSC குரூப் 3 போட்டித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகி உள்ளது. ஹால் டிக்கெட்டை தேர்வர்கள்  tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.