கொரோனா காரணமாக தமிழ்நாட்டில் கடந்த இரண்டு வருடங்களாக தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந் நிலையில் தற்போது தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் தேர்வுகளும் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகளும் வேலியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் குரூப்-2 முதன்மைத் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என TNPSC அறிவித்துள்ளது.

அதேபோல், குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள், குரூப் 8, குரூப் 7 பி தேர்வு முடிவுகளும் இம்மாதம் வெளியாகும் என TNPSC அறிவித்துள்ளது. கடந்த நவம்பரில் 95 பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வும், 5,446 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2ஏ தேர்வும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.