மக்களவைத் தேர்தல் காரணமாக தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதி தேர்வுகளை ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வகுப்பு மற்றும் பாடவாரியாக தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உறுதி செய்ய உள்ளனர். அதன் விவரம் இன்று அல்லது நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.