ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன் பிறகு அதிமுக கட்சியில் எடப்பாடி தரப்பு வேட்பாளரான கேஎஸ் தென்னரசு போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி மற்றும் தேமுதிக கட்சிகளும் போட்டியிடும் நிலையில் சுயேட்சையாகவும் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

இந்நிலையில் தேமுதிக கட்சியின் செயலர் சதீஷ் செய்தியாளர்களை சந்தித்தபோது, 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக கூட்டணியுடன் அதிமுக நின்று இருந்தால் கண்டிப்பாக வெற்றி பெற்று இருக்கும் என்று கூறியுள்ளார். ஆனால் அது முடிந்து போன கதை. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பொருத்தவரை தேமுதிக பலம் வாய்ந்த கட்சியாகவே இருக்கிறது. மக்கள் மீது கொண்ட நம்பிக்கையில் தனித்து நிற்கிறது. மேலும் இடைத்தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார்.