தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஆசிரியர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 50 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் தமிழ்நாட்டில் மதுரை மற்றும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வாகி உள்ளனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை எஸ்.எஸ்.மாலதி இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். செப்டம்பர் 5ஆம் தேதி டெல்லி விஞ்ஞான் பவனில் விருது விழா நடைபெறும்.