தெலுங்கு தேசம் அலுவலகத்தை அக்கட்சியை சேர்ந்த அதிருப்தியாளர்கள் சூறையாடியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தலில் போட்டியிட முன்னாள் எம்எல்ஏ பிரபாகர் ரெட்டிக்கு வாய்ப்பு வழங்கவில்லை எனக் கூறி, அவரது ஆதரவாளர்கள், அனந்தபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்துக்குள் புகுந்து அங்கிருந்த பொருள்களை நொறுக்கினர். பின்னர் அவற்றை வெளியே எடுத்து வந்து தீ வைத்து எரித்தனர்.