கிரேட்டர் நொய்டாவில் வெறிபிடித்த தெருநாய் ஒன்றிற்கும் காளை மாடு ஒன்றிற்கும் இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில், அவ்வழியே சென்ற இரண்டு பெண்கள் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் குடியிருப்புப் பகுதியில் நாய் திடீரென காளையை ஆக்ரோஷமாகத் தாக்கத் தொடங்கியதால், மிரட்சியடைந்த காளை அங்கும் இங்கும் ஓட ஆரம்பித்தது. இந்த எதிர்பாராத மோதலின் போது, தப்பிக்க முயன்ற பெண்கள் இருவரும் நிலைதடுமாறி விழுந்ததோடு, விலங்குகளின் மோதலில் சிக்கி பலத்த காயங்களுக்கு உள்ளாகினர்.

“>

இதனால் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு விலங்குகளைப் பிரித்து பெண்களை மீட்டனர். காயமடைந்த இருவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்கள் மற்றும் கால்நடைகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.