இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் பாரத் கௌரவ் மற்றும் இந்தியா சுற்றுலா எக்ஸ் பெட்டியா வை தொடங்கியுள்ளது. இதன் மூலமாக ஒரு நபர் திருப்பதி, ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்கு செல்லலாம். இந்த ட்ராவல் பேக்கேஜ் 19,620 ரூபாய் முதல் தொடங்குகின்றது. இந்த சுற்றுலா வருகின்ற ஜூலை 22ஆம் தேதி பீகாரில் உள்ள பெட்டியாவிலிருந்து தொடங்கும் என்று ஐ ஆர் சி டி சி அறிவித்துள்ளது. மொத்தம் 10 இரவுகள் மற்றும் 11 பகல் பொழுதுகள் அடங்கியுள்ள இந்த சுற்றுலா பயணம் பல தனித்துவமான அம்சங்களையும் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் ஒரு முறை பணம் செலுத்தி விட்டால் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். உங்களின் பயணம் முழுவதும் தேவையான உணவு மற்றும் ஹோட்டல் போன்ற அனைத்துமே கவனித்துக் கொள்ளப்படும். இந்த பயணம் பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ ஆர் சி டி சி இணையதளத்தை பார்வையிடுவதன் மூலம் பயணிகள் இந்த டூர் பேக்கேஜை ஆன்லைன் மூலமாக புக் செய்யலாம். இதற்கு www.irctctourism.com என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.