தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மாலத்தீவுக்கு போதைப் பொருள் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு சிறிய ரக கப்பலில் 30 கிலோ ஹசீஸ் என்ற போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனை மத்திய வருவாய் மற்றும் குற்ற புறனாய்வுத்துறை அதிகாரிகள் நடுக்கடலில் வைத்து பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட இந்தோனேசியாவை சேர்ந்த இரண்டு பேர் உட்பட மொத்தம் 11 பேரை கைது செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருளின் மதிப்பு ரூபாய் 80 கோடி ஆகும். இந்த சம்பவத்தில் துறைமுகப் பணியாளர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெறுகிறது.