துலாம் ராசி அன்பர்களே….

இன்று குடும்ப உறவுகள் கண்டிப்பாக பலப்படக்கூடும். காரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத் தேவைகள் ஒரு பக்கம் அதிகரிக்க கூடும் .மற்றவர்களை நம்பி எவருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். தொழில் வியாபாரத்தில் நிலுவைப் பணி நிறைவு பெறும். கூடுதல் உழைப்பினால் பணவரவு சீராகும். கண்களுடைய பாதுகாப்பில் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். கூர்மையான பொருட்களை கையாளும் போது கவனமாக இருங்கள். முன் கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது பிரச்சினைகள் வராமல் தடுக்கும் .

இன்று பண வரவும் திருப்தியைக் கொடுக்கும்.   இன்று மிகவும் கவனத்துடன் செயல்பட்டால் வெற்றி என்பது சுலபமாக வரக்கூடும். எதையும் சமாளிக்க கூடிய திறமை வெளிப்படும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் கண்டிப்பாக நடக்கும். எல்லா வகையிலும் நன்மைகள் ஏற்படும் .நல்லது கெட்டதுகளில் பங்கு கொள்ள முடியும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மனமகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

இன்று பெண்களுக்கு சுகபோக வாழ்க்கை அமையும். பெருந்தன்மையுடன் நடந்து கொள்வீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய எண்ணம் மேலோங்கும் .பெண்கள் நிதி சம்பந்தப்பட்டவிசயங்களில்  தெளிவாக அணுகுவீர்கள். வரவேண்டிய பணத்தைப் பெற்றுக் கொள்வீர்கள் .கொடுக்கல் வாங்கல்கள் சீர்படுத்திக் கொள்வீர்கள். மாணவர்கள் சுகபோக வாழ்க்கை அமைத்துக் கொண்டு சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். மனதிற்குள் சந்தோசம் ஏற்படக்கூடும். பெற்றவர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். கல்வியில் நீங்கள் முயற்சி பண்ணுங்கள் வெற்றி நிச்சயம்.

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஊதா  நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இன்றைய தினம் நந்தீஸ்வரர் மற்றும் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியிலும் ஈடுபட்டு பாருங்கள். நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடும்.

அதிர்ஷ்டமான திசை  : வடகிழக்கு

அதிஷ்ட எண்   : 3, 5  மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்  : ஊதா மற்றும் மஞ்சள் நிறம்