நாடு முழுவதும் ரேஷன் கடைகளில்   மூலமாக ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் நாடு முழுவதும் இந்த மாதம் வரிசையாக பண்டிகை நாட்கள் வர இருக்கிறது. இதனால் பல மாநில அரசுகள் ரேஷன் கடை மூலமாக மக்களுக்கு பண்டிகை கால பரிசுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது

இந்நிலையில்

தீபாவளியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் துவரம் பருப்பு, பாமாயிலை இலவசமாக வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பெயர் தெரியாத நிறுவனங்களின் பொருட்களை (மஞ்சள், மசாலா பொருட்கள், மாவு வகைகள், சமையல் எண்ணெய், தேங்காய் எண்ணெய்) விற்க கூடாது. பிரபலமாக உள்ள நிறுவனங்களின் பொருட்களை மட்டுமே விற்க வேண்டும் என கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது