தமிழகத்தில் பொதுவாக சிறப்பு பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி தீபாவளி பண்டிகையை கொண்டாட பலரும் தங்களின் சொந்த ஊருக்கு செல்வார்கள். இதற்காக சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் முன்னதாகவே திட்டமிட்டு செல்பவர்கள் வழக்கமாக இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவு செய்து பயணிப்பார்கள்.

இவர்களின் வசதிக்காக ஐ ஆர் சி டி சி மூலமாக 120 நாட்களுக்கு முன்னதாக பயண சீட்டு முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் இதனை முன்னிட்டு நவம்பர் 9ஆம் தேதி செல்பவர்கள் ஜூலை 12ஆம் தேதி முதலும், நவம்பர் 10ஆம் தேதி செல்பவர்கள் ஜூலை 13ஆம் தேதி முதலும், நவம்பர் 11ஆம் தேதி செல்பவர்கள் ஜூலை 14ஆம் தேதி முதலும், நவம்பர் 12ஆம் தேதி செல்பவர்கள் ஜூலை 15ஆம் தேதி முதலும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.