தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது. நவ.12ம் தேதி (ஞாயிறு) தீபாவளியை கொண்டாட வெளியூரில் உள்ள பெரும்பாலானவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர் விடுமுறையில் சென்றவர்கள் உடனே ஊர் திரும்ப வேண்டிய நிலை உள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்படக்கூடும். அதனை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு மறுநாள் நவ.13ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.