தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் பயணிகளின் வசதிக்காக சென்னை மற்றும் நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை மற்றும் நெல்லை இடையே நவம்பர் 8, 15, 22 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

இந்த சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.45 மணிக்கு நெல்லை சென்றடையும் எனவும் மறு மார்க்கமாக நவம்பர் 9, 16, 23 ஆகிய தேதிகளில் நெல்லையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் இந்த சிறப்புரையில் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.