பிரபல நடிகர் ஷியாஸ் கரீம் என்பவர் கேரளாவை சேர்ந்தவர்.  இவர் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இளம்பெண் ஒருவர்  தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி பாலியல் ரீதியாக பயன்படுத்தி கொண்டதாக நடிகர் ஷியாஸ் கரீம் மீது கண்ணூர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஷியாஸ் கரீம், இன்று துபாயில் இருந்து திரும்பிய நிலையில் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். உடனடியாக கண்ணூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தற்பொழுது கண்ணூர் காவல்துறையினர் சென்னை விரைந்துள்ளனர்.