விஜய் டிவியின் ஒளிபரப்பான பிரபலமான சீரியல் ஒன்று தான் முத்தழகு. இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை தான் சம்யுக்தா. அதேசமயம் சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் சம்யுக்தாவும் விஷ்ணுகாந்தம் ஒன்றாக சேர்ந்து நடித்தனர். அந்த சீரியல் சில நாட்களில் முடிவுக்கு வந்த நிலையில் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் தற்போது பிரிந்துள்ளனர்.

திருமணம் முடிந்த 15 நாட்களிலேயே இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். எங்களுடைய பிரிவுக்கு முக்கிய காரணமே சம்யுக்தாவின் தந்தையும் அவரது நெருங்கிய தோழியும் தான் என விஷ்ணுகாந்த் கூறியுள்ளார். மறுபக்கம் சம்யுக்தாவும் விஷ்ணுகாந் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.