தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் மணமக்கள் மணமேடையில் நின்றுகொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. அவர்களுக்கு வாழ்த்து சொல்ல ஒவ்வொருவராக மேடைக்கு வருகின்றனர். அப்போது மண மகனின் ஒரு தோழனும் வாழ்த்து சொல்ல மேடையில் ஏறுகிறார். பின் நண்பன் மேடையை ஏறியதும் மணமக்கள் இருவருக்கும் இடையில் நின்றுவிடுகிறார். அதன்பின் மாப்பிள்ளையை ஒரு பக்கமாக அவர் அழைத்துச் செல்கிறார்.

மேலும் மாப்பிள்ளை தனது நண்பனுடன் செல்வதை பார்த்து மணமகளும் பின்னால் போகிறார். மணமகள் நகர்ந்து சென்ற பின்  மாப்பிள்ளையின் தோழன் தன் மற்ற நண்பர்களையும் மேடைக்கு அழைத்தது இன்னும் வேடிக்கையாக இருக்கிறது. பல நண்பர்கள் மேடையில் வருவதை பார்த்து மணபெண் அதிர்ச்சி ஆகிறார். மேடையின் மற்றொரு ஓரத்தில் மாப்பிள்ளையை நிற்கவைத்த நண்பர்கள் போட்டோ எடுத்துக்கொள்ள தொடங்குகிறார்கள். இப்படி திருமண நிகழ்ச்சியில் நண்பர்களின் அலப்பறைகள் சற்று அதிகமாகவே போய் விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.