கந்தகோட்டம் பகுதியில் பேரணி நடத்த அனுமதிகோரி இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகி மனு அளித்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், திருப்பரங்குன்றம் மலைப் பிரச்சனைக்காக சென்னையில் பேரணி நடத்துவது தேவையில்லாத பிரச்னையை உருவாக்கும். பேரணி நடத்த கேட்டுள்ள இடம் கூட்ட நெரிசல் மிகுந்தது. திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கும், இந்த இடத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது? தேவையில்லாமல் பிரச்சனையை உருவாக்கப் பார்க்கிறீர்கள்” என நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை உரிமை விவகாரம், ப்ரிவியூ கவுன்சில் வரை சென்று முடிவு செய்யப்பட்ட பிறகு, அது குறித்து மீண்டும் பிரச்னை எழுப்புவது சரியல்ல. தர்கா சார்பில் விலங்கு பலியிட்டு சமபந்திக்கு அழைப்பு விடுப்பதாக போலியான போஸ்டர்கள் வெளியிடப்பட்டது தொடர்பாக போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது என அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் வாதம் செய்துள்ளார்.