திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வரும் நிலையில் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. அதன்படி ஒவ்வொரு மாதத்திற்கான தரிசன டிக்கெட் முன்னதாகவே ஆன்லைன் மூலம் வெளியிடப்படும் நிலையில் தற்போது பிப்ரவரி மாத தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு குறித்த தகவலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி கோவிலில் தரிசனம் செய்ய அதற்கான முன்பதிவு டிக்கெட்டுகளை மூன்று மாதங்களுக்கு முன்பாகவே தேவஸ்தானம் வெளியிடும் நிலையில் பிப்ரவரி மாத தரிசனத்திற்கான இணையதள டிக்கெட் வருகின்ற 21ஆம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.