தற்போது திருப்பதி திருமலையில் பக்தர்கள் கூட்டமானது குவிய தொடங்கியுள்ளது. கோடை விடுமுறை தொடங்கி விட்டதால் பல பகுதிகளில் இருந்தும் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.  இந்நிலையில் திருப்பதியில் பாதயாத்திரை சென்ற சிறுவனை சிறுத்தைப் புலி தாக்கியது.

இந்த விவகாரமானது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, “திருமலைக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் அச்சப்பட வேண்டாம். ஆனால் தனியாக செல்லாமல் குழுக்களாக செல்லுங்கள். எப்போதும் நடைபாதையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்” என உள்ளூர் ஏஎஸ்பி முனிராமையா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.