திருநெல்வேலி மற்றும் ஜாம்நகர் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் சேவை டிசம்பர் 25ஆம் தேதி இன்று முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், திருநெல்வேலி மற்றும் குஜராத் மாநிலம் ஜாம்நகர் இடையே வாரம் இரண்டு முறை விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் ஜாம்நகர் விரைவு ரயிலின் இணைப்பு ரத்தானதால் திருநெல்வேலியில் இருந்து இன்று காலை 8 மணிக்கு புறப்படும் ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.