
திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை (ஜூன்.13) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட ஆறுமுகனேரி, குரும்பூர், காயல்பட்டணம், ஆத்தூர் மற்றும் திருச்செந்தூர் உபமின் நிலையங்களில் நாளை வியாழக்கிழமை (13.06.24) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக புன்னக்காயல், ஆத்தூர், சேர்ந்தபூமங்கலம், ஆறுமுகனேரி பேயன்விளை, காயல்பட்டிணம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், குமாரபுரம், ஆசிரியர் காலனி, சண்முகபுரம், கோவிந்தம்மாள் கல்லூரி, காந்திபுரம், கிருஷ்ணா நகர், திருச்செந்தூர், காயாமொழி, சங்கிவிளை, வீரபாண்டியன் பட்டிணம், ராஜ்கண்ணா நகர், குறிஞ்சிநகர், அமலிநகர், தோப்பூர், கானம், வள்ளிவிளை, சோனகன்விளை, குரும்பூர், நல்லூர், மூலக்கரை, அம்மன்புரம், பூச்சிகாடு, வள்ளிவிளை, கானம் கஸ்பா, நாலுமாவடி இடையன்விளை, வடலிவிளை, தென்திருப்பேரை, மாவடிபண்னை, குரங்கனி. புறையூர், மணத்தி, கல்லாம்பாறை, மயிலோடை, குருகாட்டூர், ராஜபதி, சேதுக்குவாய்த்தான், வரண்டியவேல், நாலுமாவடி, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், ஆகிய ஊர்களுக்கு காலை 09.00 மணி முதல் மாலை 16.00 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.