அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் மே மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவில் காவடி பிறை மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கோவில் நிரந்தர உண்டியல் மூலம் ரூ.2 கோடியே 47 லட்சத்து 76 ஆயிரத்து 188 ரூபாயும், கோசாலை பராமரிப்பு ரூ.49,083, மற்றும் யானை பராமரிப்பு உண்டியல் மூலம் ரூ.1,19,428 என மொத்தம் உண்டியல்களில் ரூ.2.49 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

மேலும் 1100 கிராம் தங்கமும், 24 ஆயிரம் கிராம் வெள்ளியும், 47 ஆயிரம் கிராம் பித்தளை, 5ஆயிரம் கிராம் செம்பு, 5ஆயிரம் கிராம் தகரம் ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். 326 அயல் நாட்டு கரன்சி நோட்டுகளும் காணிக்கையாக கிடைத்துள்ளது.