நமது நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் மேகாலயா, திரிபுரா, நாகலாந்து போன்றவற்றின் சட்டசபைகளின் ஆயுள் காலம் முடிவடைகின்ற காரணத்தினால் அங்கு தேர்தல்கள் நடத்தப்படுகிறது. மூன்று மாநில சட்டசபைகளுக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் 16 மற்றும் 27-ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் தேர்தல் நடைபெற உள்ள மூன்று மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்க போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. திரிபுராவில் கால் நூற்றாண்டாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஆட்சி நடத்தி வந்தது. ஆனால் பா.ஜ.க கடந்த 2018 -ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது.

தற்போது அங்கு மாணிக் சகா முதல் மந்திரியாக இருந்து வருகிறார். 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பா.ஜ.க 33 ஐ.பி.எப்.டி கட்சி4, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 15, காங்கிரஸ் 1 இடங்களை பெற்றுள்ளது. மேலும் ஏழு இடங்கள் காலியாக இருக்கிறது. பா.ஜ.கவிடமிருந்து ஆட்சியை கைப்பற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது. அதனால் பலத்த போட்டி நிலவும். மேகாலயாவில் முதல் மந்திரி கொன்ராட் சன்மா தலைமையிலான என்.பி.பி என்னும் தேசிய மக்கள் கட்சி பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மொத்தம் உள்ள 60 இடங்களில் என்.பி.பி 20, யூ.டி.பி 80,  திரிணாமுல் காங்கிரஸ் 8, பி.டி.எப்  2 பா.ஜ.க 2, தேசியவாத காங்கிரஸ்1, சுயேச்சை 1 இடங்களை கொண்டுள்ளது.

மேலும் 18 இடங்கள் காலியாக இருக்கிறது. இங்கு மாநில கட்சியான என்.பி.பி கட்சியின் ஆதிக்கம் இருந்து வருகிறது. அதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் களத்தில் தீவிரம் காட்ட விரும்புகிறது. இதனையடுத்து நாகலாந்தில் முதல் மந்திரி நைபியு ரியோ தலைமையில் என்.டி.பி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு எதிர்க்கட்சியை இல்லை கட்சிகளின் பலம் என எடுத்துக் கொண்டால் என்.டி.பி.பி கட்சிக்கு 42, பாஜகவிற்கு 12, என்.பி.எப் கட்சிக்கு 4 இடங்களும், சுயேட்சைகளுக்கு 2 இடங்களும் உள்ளது. அதுவும் மாநில கட்சியான என்.டி.பி.பி யின் செல்வாக்கு நிலவுகிற மாநிலம் ஆகும்.