முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் இன்று தமிழக முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைதி பேரணி சென்னை ஓமந்தூரார் வளாகம் முதல் அண்ணா சதுக்கத்தில் உள்ள கலைஞர் நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடைபெற்றது.

அதில் பங்கேற்றபோது மயங்கி விழுந்த சென்னை 146 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஷண்முகம் நேரடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவர் மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.