
திமுக என்றால் இரண்டு கொம்பு முளைத்தவர்களா என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்களில் இருந்து இந்த முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ஒரு பாடம் கற்றுக் கொள்ளவில்லையா. காவல்துறைக்கு பணம் கொடுத்து தான் விற்கின்றோம் என்று கள்ளச்சாராயம் விற்பவன் தைரியமாக சொல்லும் அளவுக்கு கள்ளச்சாராயண விற்பனையை நிறுவனமாக திமுக அரசு பயன்படுத்தி உள்ளது வெட்கப்பட வேண்டும்.
அது மட்டுமல்லாமல் திமுக கட்சிக்காரன் என்ற அடையாளம் வேறு கொண்டுள்ளனர். திமுக என்றால் இரண்டு கொம்பு முளைத்தவர்களா, அவர்கள் எந்த தவறு செய்தாலும் காவல்துறை கண்டு கொள்ளாதா. தமிழகத்தில் நீங்கள் ஆட்சிக்கு வந்தது உங்களுடைய கட்சி அடையாளத்தை லைசென்ஸ் ஆக பயன்படுத்தி சகல குற்றங்களையும் திமுகவினர் செய்வதற்கு தானா முதல்வர் ஸ்டாலின் அவர்களே? உடனடியாக கள்ளச்சாராயம் விற்பனையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்வதோடு எந்தவித அரசியல் குறிக்கிடும் இல்லாமல் அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.