சென்னை விருகம்பாக்கத்தில் அண்மையில் திமுக கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர்களிடம் திமுக நிர்வாகிகள் இரண்டு பேர் பாலியல் சீண்டரில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் எல்லை மீறவே அந்த பெண் காவலர் கதறி அழுதுள்ளார். இதையடுத்து அருகே இருந்த போலீசார் ஒருவரை பிடித்த நிலையில் மற்றோருவர் தப்பியோடியுள்ளார்.

இதையடுத்து விரட்டிச் சென்ற காவல் ஆய்வாளர் தாம்சன் சேவியர் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்திற்கு பெரும் அதிர்ச்சியும் பல கண்டனங்களும் எழுந்தது. இதனைத் தொடர்ந்து பெண் காவலரிடம் அத்துமீறியதாக கட்சியை சேர்ந்த இரண்டு பேரை தற்காலிகமாக நீக்கம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.