அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி திங்கட்கிழமை பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாளையும் வங்கிகள் இயங்காது. எனவே வங்கியில் வேலை இருப்பவர்கள் இன்றே அவற்றை முடித்துக் கொள்ளுங்கள். அதோடு பொதுத்துறை காப்பீடு போன்ற நிதி பரிவர்த்தனைகளும் நடைபெறாது என்பதால் இன்றே அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.