“திமுக ஆட்சியில் தாலிக்கு தங்கமும் இல்லை, தாளிக்க தக்காளியும் இல்லையென்று” முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் திமுகவை சாடி பேசியுள்ளார். இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அவர், 1 கிலோ தக்காளியை ரூ.30க்கும், 40க்கும் வாங்கி கொண்டிருந்த பொதுமக்களை ரூ.120 கொடுத்து வாங்க செய்தது இந்த திமுக அரசு தான் என்று குற்றம்சாட்டி பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக நிர்வாகிகள் அனைவரும் மேடையில் தக்காளி, கத்தரிக்காய், முருங்கக்காய் வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை மாலையாக கழுத்தில் அணிந்து கொண்டு நின்றார்கள். தாலிக்கு தங்கம் இல்லை தாலிக்கு தக்காளி இல்லை என்பது உள்ளிட்ட காய்கறி விலை உயர்வை கட்டுப்படுத்தாத திமுக அரசு கண்டித்து முழக்கங்களை எழுப்பினார்கள்.