தமிழக முழுவதும் தாய்ப்பால் விற்பனை குறித்து தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சட்ட விரோதமாக தாய்ப்பால் விற்பனை தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். எங்கெல்லாம் விதிகளுக்கு எதிராக தாய்ப்பால் விற்பனை நடைபெற்று வருகிறது என்பது குறித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தாய்ப்பால் விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் என்பதால் வேறு பொருள்கள் விற்பனை செய்வதாக கூறி தாய்ப்பால் விற்பனை செய்பவர்களின் உரிமத்தை ரத்து செய்யவும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறிப்பாக சென்னையில் தாய்ப்பால் விற்பனையை கண்காணிப்பதற்கு 18 குலுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தாய்ப்பால் விற்பனை குறித்து 94440 423222 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். புகார்களை வாட்ஸ்அப் மூலமாக அல்லது குறுஞ்செய்தி மூலமாக அனுப்பலாம். புகாரின் பேரில் தீவிர ஆய்வு நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.