தாய்க்கு மகன்கன் இருவரும் வரன் பார்த்து திருமணம் செய்து வைத்த நெகிழ்ச்சி சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், வளையாம்பட்டு ஊராட்சியைச் சேர்ந்தவர் செல்வி. இவர் திருமணமான சில ஆண்டுகளிலேயே கணவனை இழந்துள்ளார். தனியொரு பெண்மணியாக 2 மகன்களையும் வளர்த்துள்ளார்.

இந்நிலையில் தாய்க்கு ஒரு துணை வேண்டும் என நினைத்த இவரின் மகன்கள் இருவரும், ஏழுமலை என்ற விவசாயி ஒருவரை தங்களது தாய்க்கு 2வது திருமணம் செய்து வைத்துள்ளனர். கணவர் தன்னை அன்பாக பார்த்துக் கொள்வதாக செல்வி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.