தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் தற்போது GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேசமயம் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியலிலும் களமிறங்கியுள்ளார்.

இந்த நிலையில் தன்னுடைய தாய் சோபாவுக்காக விஜய் சாய்பாபா கோவில் கட்டிய நிகழ்வு ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சாய்பாபா கோவிலில் விஜய் இருப்பது போன்ற புகைப்படம் நேற்று வைரல் ஆனது. அந்த கோவில் சென்னை கொரட்டூரில் 8 கிரவுண்ட் நிலத்தில் நடிகர் விஜய் கட்டியது என தெரியவந்துள்ளது. சோபா தீவிர சாய்பாபா பக்தை என்பதால் அவருடைய ஆசைக்காக விஜய் இந்த கோவிலை கட்டிக் கொடுத்துள்ளார்.