சென்னை மாவட்டம் ஆவடி இராமலிங்கபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர்கள் மனைவி எமிலிம்மாள். இந்த தம்பதியினருக்கு 3 மகள்களும், கார்த்திக் என்ற மகனும் இருந்தனர். கார்த்திக் தனியார் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

சம்பவம் நடந்த அன்று கார்த்திக் தனது தாயுடன் அதே பகுதியில் உள்ள வீட்டில் நடைபெறும் பிரார்த்தனை கூடத்திற்கு சென்றுள்ளார். அங்கு இரண்டாவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த கார்த்திக் மரத்தில் சுற்றி இருந்த காற்றாடியை எடுக்க முயன்றதாக தெரிகிறது.

அப்போது எதிர்பாராதவிதமாக கார்த்திக் மாடியிலிருந்து கீழே தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திக்கை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.