
தாம்பரம் -ராமநாதபுரம் இடையே வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் பயணிகளின் வசதிக்காகவும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், தாம்பரத்திலிருந்து வருகின்ற ஜூன் 21, 23, 28, 30 மற்றும் ஜூலை 5, 7, 12, 14, 19, 21, 26, 28 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு செல்லும் இந்த சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் மறுநாள் காலை 7.50 மணிக்கு இராமநாதபுரம் சென்றடையும்.
மறு மார்க்கமாக ராமநாதபுரத்திலிருந்து ஜூன் 22, 24, 29 மற்றும் ஜூலை 1, 6, 8, 13, 15, 20, 22, 27, 29 ஆகிய தேதிகளில் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் மறுநாள் காலை 3.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.