மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான். நடிகர் துல்கர் சல்மான் தற்போது மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தமிழிலும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதன்பிறகு நடிகர் துல்கர் சல்மான் பாலிவுட்டில் சுப் என்ற திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்காக சிறந்த வில்லன் நடிகருக்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் துல்கர் சல்மானுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு சிறந்த நடிகருக்கான பிரிவில் நடிகர் ரன்பீர் கபூருக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்துள்ளது.

நடிகை ஆலியா பட்டுக்கு சிறந்த நடிகைக்கான பிரிவில் தாதா சாகேப் பால்கே விருது கிடைத்துள்ளது. சிறந்த நம்பிக்கை கூறிய நட்சத்திரம் என்ற பிரிவில் காந்தாரா பட இயக்குனர் மற்றும் நடிகர் ரிஷப் செட்டிக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்துள்ளது. சிறந்த வில்லி நடிகைக்கான பிரிவில் நடிகை மௌனி ராய்க்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்துள்ளது. சின்னத்திரை சினிமாவில் சிறந்த நடிகருக்கான விருது லெயின் இஸ்மாம் என்பவருக்கு கிடைத்துள்ளது. மேலும் சின்னத்திரையில் சிறந்த நடிகைக்கான விருது தேஜஸ்வி பிரகாஷ் என்பவருக்கு கிடைத்துள்ளது.