நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் தினமும் தோறும் ரயில்களில் பயணம் செய்து வருகிறார்கள். குறிப்பாக வெகு தூரமாக செல்லும் இடங்களுக்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். இந்நிலையில்  ஐஆர்சிடிசி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, தவறுதலாக பணம் பிடித்தமானால், ஒரு மணி நேரத்தில் அத்தொகை உங்கள் வங்கி கணக்குக்கு திரும்ப கிடைக்கும் வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது.

டிக்கெட் முன்பதிவு ஆகாத நிலையிலும், பிடித்தம் செய்யப்படும் பணம் திரும்ப கிடைப்பதில் தாமதம் நிலவுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதற்கு விரைவில் தீர்வு காணும் முயற்சியில் ஐஆர்சிடிசி, சிஆர்எஸ் ஆகியவை ஈடுபட்டுள்ளன.