சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வியக்கத்தக்க திருட்டுச் சம்பவத்தின் காணொளி காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. ஒரு நகைக்கடையில் இரண்டு பெண்கள் நகை திருடியதாகப் பிடிபட்டனர். ஆனால், ஆரம்பத்தில் சோதனையிட்டபோது அவர்களிடம் நகைகள் எதுவும் சிக்கவில்லை. இதனால் அங்கிருந்தவர்களுக்குச் சந்தேகம் வலுத்த நிலையில், திடீரென அந்தப் பெண்களில் ஒருவர் தனது தலையைச் சொறிந்துள்ளார். அந்த ஒரு சிறிய செய்கை அவர் செய்த பெரிய தவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது.
எங்க தேடியும் கிடைக்கலையே …….
அக்கா தலைய சொரிஞ்சதும் இடம் தெரிஞ்சு போச்சு😂😂😂
நகைக்கடையில் நகை திருடி ஒளிச்சு வச்சிருக்க இடம் பாத்தீங்களா😅😅😅😅😅😅 pic.twitter.com/4V5WM21gu8
— SHAAN SUNDAR🖤♥️🖤♥️ (@Shaan77sun) January 10, 2026
அந்தப் பெண் தலையைச் சொறிந்த விதம் சந்தேகத்தை ஏற்படுத்தவே, அங்கிருந்த நபர் அவரது தலைமுடியைப் பரிசோதித்துப் பார்த்தார். அப்போது, யாரும் எதிர்பார்க்காத வகையில் அவரது தலைமுடிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நகை கண்டுபிடிக்கப்பட்டது. மிகவும் புத்திசாலித்தனமாகத் திருடியதாக நினைத்த அந்தப் பெண், கடைசியில் தலையைச் சொறிந்ததன் மூலம் கையும் களவுமாகப் பிடிபட்டார். இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து, “திருடன் கையில் அகப்படமாட்டான், ஆனால் தன் செயலில் அகப்படுவான்” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
