மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஹிங்கோலி பகுதியை சேர்ந்த விவசாயி கஜனன் நாராயன். இவர் மகாராஷ்டிரா முதல்வருக்கு கடிதம் ஒன்று எழுதி இருந்தார். அதில் தான் மாதுளை விவசாயம் செய்வதாகவும் கொரோனா காலத்தில் இருந்து தன்னால் விளைவிக்கும் பழங்களை விற்பனை செய்ய முடியவில்லை என்றும் இதனால் கடந்த இரண்டு வருடங்களில் 50 லட்சம் ரூபாய் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனக்கு வங்கியில் 5 லட்சம் கடனும் மற்ற நிதி நிறுவனங்களில் 15 லட்சம் கடனும் உள்ளதாக குறிப்பிட்டுள்ள கஜனன் நாராயன் தனக்கு கடனை செலுத்த கூறி அனுப்பப்படும் நோட்டீஸ்களால் தான் மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும் குறிப்பிட்டுள்ளார். இறுதியாக தனக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு அரசு இழப்பீடு கொடுக்க வேண்டும் இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியே இல்லை என அந்த கடிதத்தை முடித்துள்ளார்.