டெல்லியில் உள்ள சதர் பஜார் பகுதியை சேர்ந்தவர் தீபக்குமார். இவர் தனது தாயிடம் அவர் பெயரில் உள்ள வீட்டை விற்று  பணத்தை தருமாறு அடிக்கடி கேட்டு வந்துள்ளார். ஏற்கனவே தாயின் பெயரில் இருந்த ஒரு வீட்டை விற்று டிவி கார் போன்ற ஆடம்பர பொருட்களை வாங்க பயன்படுத்தியுள்ளார். இந்நிலையில் தற்போது இருக்கும் ஒரு வீட்டையும் விற்று பணத்தை தர வேண்டும் என தனது தாயிடம் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் தீபக்குமாரின் சகோதரி தாயிடம் பேசுவதற்காக வீடியோ கால் அழைத்துள்ளார். ஆனால் தீபக்குமார் தாய் எங்கே என்று ஒன்றும் கூறவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த சகோதரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து தீபக்குமாரின் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் அங்கு சோதனை செய்தபோது வயதான பெண் ஒருவர் சடலம் உடல் முழுவதும் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இது குறித்து  காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் வீட்டை விற்பனை செய்ய தாய் சம்மதிக்காததால் தீபக்குமார் கடுமையாக தாக்கியதில் அவர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.