இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினர் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை முடிவை கையில் எடுக்கின்றனர். இதனால் அவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் படும் இன்னல்களை யாரும் யோசித்துப் பார்ப்பதில்லை. மன அழுத்தத்தின் விளைவாக இளம் தலைமுறைகளிடம் பெருகிவரும் தற்கொலை சம்பவங்கள் அச்சத்தை ஏற்படுத்துகின்றது.

அரசும் கல்வி துறையும் இதை கவனத்தில் கொண்டு உடல் ஆரோக்கியம் போல மன ஆரோக்கியத்தை பேணும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மட்டுமல்ல தற்கொலை எதற்கு தீர்வு கிடையாது என்பதை இளம் தலைமுறைகளிடம் நம்பிக்கை விதைப்பதை ஒவ்வொருவரின் கடமை. தவறான சிந்தனை வரும் போது 104, 044-24640050 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.