பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஜாதிய வன்மங்கள் கொண்ட திரைப்படங்கள் தமிழ் திரையுலகத்தில் வருகிறது. ஒரு சில இடங்களில் வன்முறைகள் நடப்பதற்கு சினிமாவே காரணமாகிவிடுகிறது. திரைப்படங்களால் சமூகத்தில் குற்றங்கள் அதிகரித்துவிட்டன என்ற அண்ணாமலையின் கருத்துக்கு சீமான் பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், தம்பி ரஞ்சித்தும், தம்பி மாரி செல்வராஜும் இந்த சமூகத்தில் இல்லாத கொடூரங்களையா படங்களில் பதிவு செய்துவிட்டனர்? தாங்கள் அனுபவித்த வலியை திரை மொழியில் கடத்தியுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.