தமிழில் ரஜினிக்கு ஜோடியாக கோச்சடையான் அனிமேஷன் திரைப்படத்தில் நடித்தவர் தீபிகா படுகோனே. இவர் இந்தியில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். இந்தி நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார் தீபிகா படுகோனே. இந்நிலையில் திருமண வாழ்க்கையில் தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ்வது தொடர்பாக தீபிகா படுகோனே பேட்டி அளித்துள்ளார்.

அதாவது, “சிறுவயது முதலே வேறு வேறு இடங்களில் வளரும் 2 பேர் திருமண பந்தத்தில் இணையும் போது அவர்களின் எண்ணங்கள் ஒரே மாதிரியாக நிச்சயம் இருக்காது. நாம் பிறந்துவளர்ந்த சூழல், சமூகவாழ்க்கை, மனிதர்களின் ஆலோசனை ஆகியவற்றின் தாக்கம் இருவர் மீதும் இருக்கும். இதனை நினைவில் வைத்துக்கொண்டால் பல பிரச்சினைகளுக்கு தீர்வுக்காணலாம். பெற்றோர் மகிழ்ச்சியான ஒரு தாம்பத்திய வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களிடம் இருந்து இன்றைய தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது” என்று அவர் கூறினார்.