தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.

இந்த தேர்வு முடிவுகளை  மாணவர்கள் tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அங்கீகரிக்கப்பட்ட இந்த இணையதளங்களில் தங்களுடைய ஹால் டிக்கெட் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்தால் ரிசல்ட் தெரிந்து விடும். மேலும் மாணவர்களின் கைபேசி நம்பருக்கும் அதாவது பதிவு செய்த செல்போன் நம்பருக்கும் குறுஞ்செய்தி வாயிலாக ரிசல்ட் அனுப்பப்படும்.

இந்நிலையில் ரிசல்ட் வெளியான நிலையில் தமிழகம் முழுவதும் 95.03 சதவீதம் வரை மொத்த தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவிகள் 96.70 சதவீதமும் மாணவர்கள் 93.16 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவிகள் தான் இந்த முறையும் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழி பாடத்தில் 135 பேர் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக கணினி அறிவியல் பாடத்தில் 9536 மாணவர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதன்பிறகு கணினி பயன்பாடுகள் பாடத்தில் 4208 பேரும், வேதியியல் பாடத்தில் 3181 பேரும், கணிதத்தில் 3022 பேரும், வணிகவியல் பாடத்தில் 1624 பேரும், கணக்குப்பதிவியல் பாடத்தில் 1246 பேரும் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும் இதே போன்று மொத்தமாக பாடத்திட்டங்களில் வாரியாக 100/100 மதிப்பெண்கள் எடுத்தவர்களின் விவரமும் வெளிவந்துள்ளது.