நெல்லை மாவட்டம் பழைய பேட்டை துணை மின் நிலையத்தில் இன்று (திங்கள்கிழமை) பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பேட்டை, தொழிற்பேட்டை, பாட்டபத்து, குன்னத்தூர், அபிஷேகபட்டி, உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் தடைபடும்.

அதன்படி விருதுநகர்: ராஜபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. பி.எஸ்.கே. நகர், அழகை நகர், ஐ.என்.டி.யு.சி. நகர், மலையடிப்பட்டி தெற்கு, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, அரசு மருத்துவமனை, புதிய பஸ் நிலையம், பாரதி நகர், ஆர்.ஆர்.நகர், சமுசிகாபுரம், சத்திரப்பட்டி, எஸ். ராமலிங்கபுரம், கலங்காபேரி புதூர், மொட்டமலை, வ.உ.சி. நகர், பி.ஆர்.ஆர். நகர், பொன்னகரம், எம்.ஆர்.நகர், லட்சுமியாபுரம், ராம்கோ நகர், நத்தம் பட்டி, வரகுண ராமபுரம், இ.எஸ்.ஐ. காலனி, ஸ்ரீரங்கபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.