தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்களும் பெருமளவில் பயமடைந்து வருகின்றனர். குறிப்பாக பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டின் 7 முக்கிய ஊர்களில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஆற்காடு.எடப்பாடி, ராமநாதபுரம், திருவள்ளூர், மேட்டூர், சிதம்பரம், உசிலம்பட்டி ஆகிய நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைய இருக்கின்றன. இதற்காக 93 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது தமிழக அரசு