தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை டிசம்பர் 24ஆம் தேதி பிரமாண்டமாக நடத்த தமிழ் திரைப்பட துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய ஜெயக்குமார், எம்ஜிஆர் நினைவு நாளில் இந்த நிகழ்ச்சி வேண்டாம் என்றும் வேறு நாளில் நடத்துங்கள் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.