முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய நாள்தான் ஜூலை 18. இந்த நாள் தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாடு தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “ஒரு சட்டமன்ற தீர்மானத்தோடு ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கனவையும் நிறைவேற்றிடும் விதமாக தமிழ் நிலப்பரப்புக்கு தமிழ்நாடு என்று பேரறிஞர் அண்ணா பெயரிட்ட  நாள் இன்று. முத்தமிழ் அறிஞர் வளர்த்துக் கொண்டு வந்த தமிழ்நாட்டை தமிழ்நாடாகவே பாதுகாக்கும் நமது முதல்வர் இந்த நாளை தமிழ்நாடு நாளாக அறிவித்தார். மாநிலத்தின் பெயர் சொல்லாக மட்டும் இல்லாமல் நமது உயிர் சொல்லாக உயர்ந்து நிற்கும் தமிழ்நாடு வாழ்க! அனைவருக்கும் தமிழ்நாடு நாள் வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.