பிரதமர் மோடி இன்று பாம்பன் பாலத்தை திறந்து வைத்தார். அதன் பிறகு ராமநாத சுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் பேசியதாவது, தமிழ்நாடு தலைவர்கள் பலர் எனக்கு கடிதம் அனுப்புகின்றனர்.
ஆனால் அதில் தமிழில் கையெழுத்திடுவதில்லை கடிதங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கும். குறைந்தபட்சம் கையெழுத்தாவது தமிழில் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் மருத்துவ கல்வியை தமிழில் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன். மருத்துவ படிப்பை தமிழில் கொண்டு வர வேண்டும் என்பதே எங்களது பெரும் ஆசை எனக் கூறியுள்ளார்.
