தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் செய்தித் துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி கணேசன் ஆகியோர் இது குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் பணிகள் நிறுவனத்தின் பெயர் பலகைகள் தமிழில் முதன்மையாக இடம்பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.